வெள்ளை கண்மீது
விடியலை விரட்டியபடி
ஒரு பொட்டு
இருட்டு விழியில்
தொங்கிக்கொண்டு இருக்கிறது
சாகாத கண்ணீர் துளியோடு
கழுத்தறுந்த கனவுகள்
கனவுகளின்
மண்பானையின் முதுகில்
கருங்கல்லின் கைரேகைகள்
உச்சி மண்டையில் வெப்பம் விதைத்தது
ஒளிச்சேர்க்கை மூலம் உசுரூட்டும்
வெண்ணிற சூரியன்
ஆலமரம் நவாமரம்
இலுப்பை மரங்களை சுற்றி
கட்டிவைத்தபடி
மேய்ந்துகொண்டு இருந்தன
காலையில் ஓட்டிச்சென்ற
கன்னி ஆடும்
அழகர்கோவிலுக்கு நேந்துவிட்ட
கெடா ஆடும்
இடையிடையே
வாய்க்காலோரம் முளைத்த
அருகம்புல் ,கோரபுல்
காய்ஞ்சுபோன
ஆலமரத்து இலைகள்
பழுத்து கிடந்த
நவாமரத்து இலைகளோடு
காரான்முள்ளை
குதறி குதறி தின்றன
அசதிதீர
பகல் தன் படுக்கையை
விரித்துக்கொண்டு இருந்தது
அந்த சந்தியா காலத்தில்
புளியமரத்திலிருந்து
கிழக்கு நோக்கி
கிளைகளுக்கு நடுவில்
ஒழுகிக்கொண்டு இருந்தது
செந்நிற சூரிய ஒளி
படியில்லாத
பால்வாடி மொட்டைமாடியில்
பக்கத்து ஊருக்கு கேட்குமாறு
ஒலித்துக்கொண்டு இருந்தது
முல்லை ரேடியோ குழாய்
மாரியம்மன் கோயிலுக்குள்
வாழைபழம் , கல்கண்டு ,
கருப்பட்டி ,சுக்கு, மிளகோடு
கரைத்து வைக்கப்பட்டது
பானக்கரசம்
எதிர்கால ஏக்க ஏணிகளில்
ஏறியபடி
பெருமாள் கோவில் மண்டபத்தில்
டேவிட் மாமாவின் வருகைக்காக
காத்துகிடந்தாள்
பழனியம்மாள் அக்கா
வீடு வீடாய்
விசாரித்துக்கொண்டு இருந்தாள் அம்மா
இருட்டியும் வீடு திரும்பாத
அக்காவை
காளியம்மன் கோவிலுக்கருகில்
கயிறுகளால்
தரைகூட்டியபடி
மே...மே ன்னு கத்தி கத்தி
கதறி கதறி அழுதபடியே
அம்மாவை நோக்கி ஓடிவந்தன
காலையில் பழனியம்மா அக்கா
ஓட்டிச்சென்ற ஆடுகள்
நடுகிணற்று தண்ணீரை
கரும்பு காட்டிற்கு நீர்பாய்ச்சியபின்
வைக்கோலோடு
காஞ்சுபோன கடலைசெடியை உருகி
தீனி போட்டுக்கொண்டு இருந்தார் அப்பா
பண்ணையார் வீட்டு தொழுவத்திலிருந்த
மாடுகளுக்கு.
பழனியம்மா ஏய் பழனியம்மோவ்
குளக்கரை ,கேணிமேடு கோவில்சுவர்
மரம் செடி கொடி,
புழு பூச்சி மீது பட்டு
அம்மாவின் கூக்குரல் எதிரொலித்தது
பழனியம்மா ஏய் பழனியம்மோவ்
மதுரை மேலமாசிவீதியில் தங்கி
தையல் வேலை
செய்துவந்தார் பெரியண்ணன் ராமு
வடமதுரை விடுதியில் தங்கி
ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்
சின்ன அண்ணன் வடிவேல்
அக்காவை காணாம் என்பது
ஏதோ செடியை விலக்கி தேடும்
புதருக்குள் ஓடி விழுந்த
சிவப்பு நிற
காரக் பந்தைபோலவே இருந்தது
விளையாட்டு சிறுவனான எனக்கு
ஏம்மா பழநியம்மாவை பார்த்தீகளான்னு
ஊரெல்லாம் படிக்காத அம்மா கேட்கையில்
தெரியாதென்றே சொன்னார்கள்
தெரியாதவர்களும், தெரிந்தவர்களும்
கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும்
முக்கால் இருட்டு
முக்காடு போட்டிருந்தது
ஒரு கிறித்துவ ஆணும்
ஒரு இந்து பெண்ணும்
ஊரை விட்டுவிட்டு போவதை
சுடுகாட்டுக்கு போவதைபோன்று
கடைசி கண்வைத்தன
தொண்ணூறுகளில் தோற்றமளித்த
தகர (பிள்ளையார்)கோவிலும்
வேரூன்றியிருந்த
அரச மரமும்
மிதிவண்டியில் உட்காரவைத்து
ரங்கசாமி கொட்டம்,பாறைகுளம்,
ஸ்ரீநிவாசன் வாத்தியார் வீட்டு வழியோடு
ஆறாயி அக்கா காத்திருந்த
காமாட்சிபுரத்து பிரிவை அடைந்தார்கள்
இப்ப வருவாரோ எப்ப வருவாரோ யென்றபடி
அப்பாவின் வருகைக்காகவே
பயந்து பயந்தே
காத்துகிடந்தாள் அம்மா
கண்டாரோலி
உன்னாலதாண்டி எம்புள்ள ஓடி போய்ட்டா
செல்லம் கொடுத்து கொடுத்து
இப்படி கெடுத்து புட்டியேன்னு
காயம் காய்க்குமாறு
சாட்டையால் அடிவாங்கும்
வண்டிமாடாய் அப்பாவால்
தண்டிக்கப்பட்டார் அம்மா
அடி உதை தாங்கமாட்டாமல்
வேக வேகமாய் ஓடி
சூசை தாத்தா வீட்டுக்குள் ஒளிந்துகொண்டாள்
பின்பு
போர்வையை எடுத்து முக்காடு போட்டபடி
பெருமாள் கோயில் மண்டபத்தில் உறங்கபோனார்
ஆலமரங்களுக்கடியில்
அடுக்கிவைத்திருந்த பண்ணையார் தோட்டத்து
கரும்பு கட்டுகளின் காவலுக்கு
சுவரில் ஒட்டியபடியே
கதவிடுக்கில் எட்டிப்பார்க்கும்
பல்லியாய்
கண்கொட்டாமல்
அடிமன அச்சத்தோடு
காத்து வரும் காலடிக்கும்
அதிர்ந்தவாறே முழிச்சு கிடந்தாள் அம்மா
சேவலற்ற அதிகாலை இருட்டின்மீது
கால்வைத்தபடி
அய்யனார் பேருந்தில் ஏறி
தன் பிள்ளைகளோடு
ஊரைவிட்டு போய்க்கொண்டு இருந்தாள்
அம்மாவும்
வாழக்காய் பட்டியிலுள்ள
தன் அண்ணன்
ரங்கசாமி வீட்டிற்கு
ra.sa.ganesan
Sunday, March 25, 2012
Saturday, March 24, 2012
ஆளில்லா அசைவற்ற அடிகுழாய்
டங்கு டங்குன்னு
ஊரே சேர்ந்து
ஓங்கி ஓங்கி ஓய்வின்றி அடித்த அடியில்
உடைந்து கிழிந்தது
அடிகுழாயின் முதுகெலும்பு
முதுகு வளைந்த
பசி பூத்த வயிறோடு
மூச்சுவிடும் மூதாட்டியாய்
வெய்யிலில் ஒற்றைக்காலில் நிற்கும்
வைகறை,
நண்பகல், மாலையிலும்
ஊர் கூடி சந்திக்கும்
உறவுகளின் பல்கலைகழகம்
சிலசமயம் மேலும் கீழுமான
வயசு பெண்களின்
டமார் டமார் அடிகளில்
வாய்மட்டுமின்றி
மூக்கு முதுகு புறங்களிலும்
பிதுங்கி கொட்டும் தண்ணீர்
பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு
வலிதாங்கமாட்டாமல்
மெதுவாய் அடிக்கச்சொல்லி
கண்ணீர்விடும்
சற்று தூரத்தில்
காலிகுடங்களோடு நடந்துவரும்
கிழவிகளை கண்டு
இடப்பக்க கள்ளி வேலிக்குள்
பதுங்கும் கரட்டானாய்
ஓடி ஒளியும் சிறுவர்கள்
தண்ணிக்கு வரும் சாக்கில்
குடங்களை அடிகுழாயில் காத்திருக்கவைத்து
காடு கரை கேணி மேடுகளில்
காத்திருக்கும் காதலருடன்
காதல் பகிரும்
தாவணிப்பெண்கள்
குளிக்காமலே பள்ளிகூடம்போகும்
அழுக்கு பசங்களுக்கு மத்தியில்
அடிகுழாயிக்கும் கிழக்கே
லைப் பாய் சோப்பு கரைய கரைய
குளிக்கும் லாரன்சு மாமா
நான்தான் முன்னாடிவந்தேன்
நான்தான் முன்னாடிவந்தேன்னு
கைகலப்பில்லா சண்டைகளில்
சின்னபயல எவ்வளவு நேரம்டி
நிக்கவைப்பீகன்னு சண்டையிடும்
பழனியம்மா அண்ணி
ஒருவர் வயலுக்கு மட்டுமே
பாய்ச்சப்பட்டது
காமாட்சிபுரத்தில் கட்டப்பட்ட
கூட்டுகுடிநீர்
கொஞ்சமாதங்களில்
வற்றிவிட்டன
குழிதோண்டிய
உறைகிணறுகள்
பிறகு
மேட்டுப்பட்டியிலிருந்து அடித்து
இடுப்பிலும் தலையிலுமாய்
சுமைகளோடு பயணப்பட்ட தாயிடம்
தன்னையும் தூக்கச்சொல்லி
ஒட்டாரம்பிடிக்கும்
குழந்தைகள்
எம்மண்ணில்
எம்பதுகளில்தான்
பிரசவமானது
அடிகுழாய்
திடீர் திடீரென்று
தொண்டை அடைத்துக்கொண்டு
தண்ணீர் தரமறுக்கையில்
பெயர்சூட்டப்படுவதுண்டு
"கெட்டுப்போன அடிகுழாயென்று"
கெட்டுப்போன அடிகுழாயால்
மீண்டும்
மேட்டுப்பட்டியிலுள்ள
அடிகுழாய்களை நோக்கி
ஓடத்துவங்கும்
காலிகுடங்கள்
மழையின்றி
குளம் வற்றிய
பொங்கல் பண்டிகைகளில்
அடிகுழாயில் கட்டிவைத்து
வைக்கோலில் தேய்த்து
குளிப்பாட்டி பொட்டுவைப்பதுண்டு
கருநிற ஆடுகளுக்கும்
பன்னிற மாடுகளுக்கும்
தெருக்கொன்றாய்
திருகு குழாய் முளைக்க
நாகரீக குண்டு விழுந்து
யாழ்ப்பான நூலகமாய்
சாம்பலாகியது
மானிட உறவுகள்
அன்று கூட்டம் நிறைந்த
குடங்களுக்கு நடுவில்
பானைவைத்த இடத்தில்
இன்று ஆளில்லா அசைவற்ற
அடிகுழாயின் முகத்தடியில்
முளைக்கிறது பனை
சாணி தெளித்த
வாசலுக்குமுன்
அயல்நாட்டு தொழிற்சாலை கழிவுகளாய்
கால்வாயில் சாக்கடை
இன்னும் இன்னும்
வசதிகள்
வாய்வைத்து தின்னும்
நம் ஆயுளை
வெகு நேரமாய்
வெறித்து வெறித்து பார்த்தபடியே
ஆறுதல் பட்டுக்கொண்டேன்
மந்தையில்
கட்டப்பட்டிருக்கும்
தலை பெருத்து கால் சிறுத்த
தண்ணீர் தொட்டியும்
ஒரு பிரமாண்டமான
அடிகுழாயென்று
ஊரே சேர்ந்து
ஓங்கி ஓங்கி ஓய்வின்றி அடித்த அடியில்
உடைந்து கிழிந்தது
அடிகுழாயின் முதுகெலும்பு
முதுகு வளைந்த
பசி பூத்த வயிறோடு
மூச்சுவிடும் மூதாட்டியாய்
வெய்யிலில் ஒற்றைக்காலில் நிற்கும்
வைகறை,
நண்பகல், மாலையிலும்
ஊர் கூடி சந்திக்கும்
உறவுகளின் பல்கலைகழகம்
சிலசமயம் மேலும் கீழுமான
வயசு பெண்களின்
டமார் டமார் அடிகளில்
வாய்மட்டுமின்றி
மூக்கு முதுகு புறங்களிலும்
பிதுங்கி கொட்டும் தண்ணீர்
பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு
வலிதாங்கமாட்டாமல்
மெதுவாய் அடிக்கச்சொல்லி
கண்ணீர்விடும்
சற்று தூரத்தில்
காலிகுடங்களோடு நடந்துவரும்
கிழவிகளை கண்டு
இடப்பக்க கள்ளி வேலிக்குள்
பதுங்கும் கரட்டானாய்
ஓடி ஒளியும் சிறுவர்கள்
தண்ணிக்கு வரும் சாக்கில்
குடங்களை அடிகுழாயில் காத்திருக்கவைத்து
காடு கரை கேணி மேடுகளில்
காத்திருக்கும் காதலருடன்
காதல் பகிரும்
தாவணிப்பெண்கள்
குளிக்காமலே பள்ளிகூடம்போகும்
அழுக்கு பசங்களுக்கு மத்தியில்
அடிகுழாயிக்கும் கிழக்கே
லைப் பாய் சோப்பு கரைய கரைய
குளிக்கும் லாரன்சு மாமா
நான்தான் முன்னாடிவந்தேன்
நான்தான் முன்னாடிவந்தேன்னு
கைகலப்பில்லா சண்டைகளில்
சின்னபயல எவ்வளவு நேரம்டி
நிக்கவைப்பீகன்னு சண்டையிடும்
பழனியம்மா அண்ணி
ஒருவர் வயலுக்கு மட்டுமே
பாய்ச்சப்பட்டது
காமாட்சிபுரத்தில் கட்டப்பட்ட
கூட்டுகுடிநீர்
கொஞ்சமாதங்களில்
வற்றிவிட்டன
குழிதோண்டிய
உறைகிணறுகள்
பிறகு
மேட்டுப்பட்டியிலிருந்து அடித்து
இடுப்பிலும் தலையிலுமாய்
சுமைகளோடு பயணப்பட்ட தாயிடம்
தன்னையும் தூக்கச்சொல்லி
ஒட்டாரம்பிடிக்கும்
குழந்தைகள்
எம்மண்ணில்
எம்பதுகளில்தான்
பிரசவமானது
அடிகுழாய்
திடீர் திடீரென்று
தொண்டை அடைத்துக்கொண்டு
தண்ணீர் தரமறுக்கையில்
பெயர்சூட்டப்படுவதுண்டு
"கெட்டுப்போன அடிகுழாயென்று"
கெட்டுப்போன அடிகுழாயால்
மீண்டும்
மேட்டுப்பட்டியிலுள்ள
அடிகுழாய்களை நோக்கி
ஓடத்துவங்கும்
காலிகுடங்கள்
மழையின்றி
குளம் வற்றிய
பொங்கல் பண்டிகைகளில்
அடிகுழாயில் கட்டிவைத்து
வைக்கோலில் தேய்த்து
குளிப்பாட்டி பொட்டுவைப்பதுண்டு
கருநிற ஆடுகளுக்கும்
பன்னிற மாடுகளுக்கும்
தெருக்கொன்றாய்
திருகு குழாய் முளைக்க
நாகரீக குண்டு விழுந்து
யாழ்ப்பான நூலகமாய்
சாம்பலாகியது
மானிட உறவுகள்
அன்று கூட்டம் நிறைந்த
குடங்களுக்கு நடுவில்
பானைவைத்த இடத்தில்
இன்று ஆளில்லா அசைவற்ற
அடிகுழாயின் முகத்தடியில்
முளைக்கிறது பனை
சாணி தெளித்த
வாசலுக்குமுன்
அயல்நாட்டு தொழிற்சாலை கழிவுகளாய்
கால்வாயில் சாக்கடை
இன்னும் இன்னும்
வசதிகள்
வாய்வைத்து தின்னும்
நம் ஆயுளை
வெகு நேரமாய்
வெறித்து வெறித்து பார்த்தபடியே
ஆறுதல் பட்டுக்கொண்டேன்
மந்தையில்
கட்டப்பட்டிருக்கும்
தலை பெருத்து கால் சிறுத்த
தண்ணீர் தொட்டியும்
ஒரு பிரமாண்டமான
அடிகுழாயென்று
நினைவுகளின் நிலநடுக்கங்களில் சிக்கிகொண்ட முதுமை எறும்புகள்
நினைவுகளின் நிலநடுக்கத்தில்
நிர்மலமாய் புதைகின்றனர்
அப்பாயில்லாத அப்பாவும்
அம்மாயில்லாத அம்மாவும்
கிணற்றில்போட்ட அஞ்சு பைசா
தூளி ஆடிகிட்டே மிதந்து மிதந்து
தரைதொட விரைவதைபோல
நடுநெஞ்சில் மிதக்கிறது
இளமை இறகுகள்
குழந்தைகளோடு
ஒரேபாயில் தூங்கிய இரவில்
விளக்கில் நசுக்கிய
மூட்டபூச்சி தடயங்களை
மூடிமறைத்துவிட்டது
வார்னீஷ்ச கலந்த சுண்ணாம்பு
கொளுத்தப்பட்ட பனையோலை
புதைமேடுகள்தானோ?
சிமென்ட் சாலையினுள்ளே
மூதாதையாரின்
காலடிச்சுவடுகள்
மண்ணோடு கலந்த வைக்கோலில்
உடைந்து கிடக்கும்
அடைகாத்து குஞ்சுபொறித்த
முட்டைஓடுகள்
பகலும் இரவும் மாறி மாறி
எட்டிப்பார்த்த குடிசை ஓட்டைகளை
தின்று கொளுத்து சிவந்து கருத்தது
சீமை ஓடுகள்
வீட்டோடு திண்ணைக்கும்
சானி மொழுகி
அய்யர்காட்டு மூலையில்
வெட்டி வந்த செம்மண் பூசி
வெள்ளையடித்த மிச்சத்தில் பிழிந்த
சுண்ணாம்புகோடுகள்
பின்னாளில்
இரண்டு திண்ணையில் ஒன்று
வரந்தாவாய் உருமாற
சுவரில் முளைத்தது
மற்றொரு வாச கதவு
அன்று
அதிகாலை அடுப்பங்கரையில்
சாம்பல் அள்ளி
சின்னமகளும் பெரியமகளும்
தென்னங்கன்னுக்கு அருகில்
துலக்கிய பாத்திரங்கள்
இன்று
வரண்டு கிடக்கின்றன
தென்னை மரத்து அடியில்
நினைத்தநேரத்தில்
அடிகுழாயில் தண்ணீர் அடித்து
துவைத்துப்போட்ட பள்ளிச்சீருடைகள்
இப்போதெல்லாம்
மாலையில் திறந்துவிடும்
திருகு குழாயின் வருகைக்காக
காத்துக்கிடக்கின்றன
காலிகுடங்கள்
தூக்கம் துறந்த கருக்கல்லில்
மூச்சு வாங்க வாங்க
நாக்கு ஏங்க ஏங்க
உறிஞ்சி உறிஞ்சி தேநீர் குடித்த
V.S.கோட்டை தேவர்கடை
சாணார்பட்டிக்கு இடம்பெயர்ந்தது
அதிகாரிபட்டி சந்தையில்
வாங்கிவந்த அரிசிஒட்டிய
உருண்டை, வடைகளை
ஆளுக்கொண்ணு கொடுத்து
தன்பங்கு பாதிவடையையும்
செல்ல பிள்ளைக்குத்தந்த
அந்த சனிகிழமை சாயங்காலம்
பால்கொஞ்சம் குடிக்கவிட்டு
மகன் பிடித்த கன்று குட்டி
விளக்கெண்ணை பிசுபிசுக்க
பசுமாட்டு காம்பில் தடவி
சர்ரு புர்ருன்னு அங்கும் இங்குமாய்
பால் கறந்த ஊர் மந்தை
மரணபடுக்கையில் கிடக்க
பால் இறங்குகிறது
மந்தையின் தொண்டையில்
நடவுக்கும் களைஎடுப்புக்கும்
ஆள்கூப்பிட வரும்
பொட்டையம்மா ,கோவிந்தா ,
லட்சுமியோட அத்தனைபேரும்
குளத்து வேலையில உக்காந்துட்டாக
காமாட்சிபுரம்
வாத்தியாருக்கு பதினைந்து வருடம்
வெள்ளைச்சாமி
தேவருக்கு பத்து வருடம்
பண்ணைக்கு இருந்த களைப்புல
மேட்டுப்பட்டி பெருமாள்
வாத்தியாருக்கு தோட்டம்போடுகிறார்
அவசர ஆத்திரத்திற்கு பணம் தருவதால்
ஒவ்வொரு கிராமத்திலும்
கணவனை இழந்த மனைவியோ
மனைவியை இழந்த கணவனோ
பிள்ளைகள் மறந்த
கணவன் மனைவியோ
ஓரிரவு பெய்த பேய்மழையில்
வேரோடு சாய்ந்துகிடந்த
ஊரோர அரசமரத்தைபோல
முடிவற்ற
நினைவு தரையில் விழுந்தபடியே
பேர பிள்ளைகளின்
கோடை விடுமுறைக்காகவே
மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
நினைவுகளின் நிலநடுக்கங்களில்
சிக்கிகொண்ட முதுமை எறும்புகள்
நிர்மலமாய் புதைகின்றனர்
அப்பாயில்லாத அப்பாவும்
அம்மாயில்லாத அம்மாவும்
கிணற்றில்போட்ட அஞ்சு பைசா
தூளி ஆடிகிட்டே மிதந்து மிதந்து
தரைதொட விரைவதைபோல
நடுநெஞ்சில் மிதக்கிறது
இளமை இறகுகள்
குழந்தைகளோடு
ஒரேபாயில் தூங்கிய இரவில்
விளக்கில் நசுக்கிய
மூட்டபூச்சி தடயங்களை
மூடிமறைத்துவிட்டது
வார்னீஷ்ச கலந்த சுண்ணாம்பு
கொளுத்தப்பட்ட பனையோலை
புதைமேடுகள்தானோ?
சிமென்ட் சாலையினுள்ளே
மூதாதையாரின்
காலடிச்சுவடுகள்
மண்ணோடு கலந்த வைக்கோலில்
உடைந்து கிடக்கும்
அடைகாத்து குஞ்சுபொறித்த
முட்டைஓடுகள்
பகலும் இரவும் மாறி மாறி
எட்டிப்பார்த்த குடிசை ஓட்டைகளை
தின்று கொளுத்து சிவந்து கருத்தது
சீமை ஓடுகள்
வீட்டோடு திண்ணைக்கும்
சானி மொழுகி
அய்யர்காட்டு மூலையில்
வெட்டி வந்த செம்மண் பூசி
வெள்ளையடித்த மிச்சத்தில் பிழிந்த
சுண்ணாம்புகோடுகள்
பின்னாளில்
இரண்டு திண்ணையில் ஒன்று
வரந்தாவாய் உருமாற
சுவரில் முளைத்தது
மற்றொரு வாச கதவு
அன்று
அதிகாலை அடுப்பங்கரையில்
சாம்பல் அள்ளி
சின்னமகளும் பெரியமகளும்
தென்னங்கன்னுக்கு அருகில்
துலக்கிய பாத்திரங்கள்
இன்று
வரண்டு கிடக்கின்றன
தென்னை மரத்து அடியில்
நினைத்தநேரத்தில்
அடிகுழாயில் தண்ணீர் அடித்து
துவைத்துப்போட்ட பள்ளிச்சீருடைகள்
இப்போதெல்லாம்
மாலையில் திறந்துவிடும்
திருகு குழாயின் வருகைக்காக
காத்துக்கிடக்கின்றன
காலிகுடங்கள்
தூக்கம் துறந்த கருக்கல்லில்
மூச்சு வாங்க வாங்க
நாக்கு ஏங்க ஏங்க
உறிஞ்சி உறிஞ்சி தேநீர் குடித்த
V.S.கோட்டை தேவர்கடை
சாணார்பட்டிக்கு இடம்பெயர்ந்தது
அதிகாரிபட்டி சந்தையில்
வாங்கிவந்த அரிசிஒட்டிய
உருண்டை, வடைகளை
ஆளுக்கொண்ணு கொடுத்து
தன்பங்கு பாதிவடையையும்
செல்ல பிள்ளைக்குத்தந்த
அந்த சனிகிழமை சாயங்காலம்
பால்கொஞ்சம் குடிக்கவிட்டு
மகன் பிடித்த கன்று குட்டி
விளக்கெண்ணை பிசுபிசுக்க
பசுமாட்டு காம்பில் தடவி
சர்ரு புர்ருன்னு அங்கும் இங்குமாய்
பால் கறந்த ஊர் மந்தை
மரணபடுக்கையில் கிடக்க
பால் இறங்குகிறது
மந்தையின் தொண்டையில்
நடவுக்கும் களைஎடுப்புக்கும்
ஆள்கூப்பிட வரும்
பொட்டையம்மா ,கோவிந்தா ,
லட்சுமியோட அத்தனைபேரும்
குளத்து வேலையில உக்காந்துட்டாக
காமாட்சிபுரம்
வாத்தியாருக்கு பதினைந்து வருடம்
வெள்ளைச்சாமி
தேவருக்கு பத்து வருடம்
பண்ணைக்கு இருந்த களைப்புல
மேட்டுப்பட்டி பெருமாள்
வாத்தியாருக்கு தோட்டம்போடுகிறார்
அவசர ஆத்திரத்திற்கு பணம் தருவதால்
ஒவ்வொரு கிராமத்திலும்
கணவனை இழந்த மனைவியோ
மனைவியை இழந்த கணவனோ
பிள்ளைகள் மறந்த
கணவன் மனைவியோ
ஓரிரவு பெய்த பேய்மழையில்
வேரோடு சாய்ந்துகிடந்த
ஊரோர அரசமரத்தைபோல
முடிவற்ற
நினைவு தரையில் விழுந்தபடியே
பேர பிள்ளைகளின்
கோடை விடுமுறைக்காகவே
மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
நினைவுகளின் நிலநடுக்கங்களில்
சிக்கிகொண்ட முதுமை எறும்புகள்
மாடுகளின் காலடிச்சுவடுகள்
யாருமற்ற
நீரில்லா கிராமத்து நிலத்தில்
முளைத்தெழ விருப்பமில்லை
விரல்தூவிய
விதைகளுக்கும்
பிழைப்புதேடி
கிராமத்து வீட்டை குட்டிசுவர்களாக்கி
மாநகரத்தில் மாடிவீடுகட்டி குடிபெயர்ந்த
கிராமத்து மக்களைப்போல்
பயிர்களும்
தரைவழி பயணப்பட்டது போல...
மாடுகட்டும் தொழுவத்திலோ
ஆடுகட்டும் ஆட்டுகாடியிலோ
இல்லை ஏதோஓர்
புளியமரத்தின்மீதோ
சாய்ந்துகொண்டு
பால்யங்களையும்
வாலிபகாலங்களையும்
அசைபோடுகிறது
என் முப்பாட்டன் ,பாட்டன் ,அப்பன்
வியர்வைசிந்தி
தொட்டுபிடித்து
மாடுகள் கண்ணீர் சிந்தி
இழுத்து உழுத
கலப்பை
மாடுகள் விற்ற வீட்டில்
வைக்கோல்போர் அடையுமிடத்தில்
கட்டிவைத்தபடியே
காய்ந்துகொண்டுயிருக்கிறது
அடுப்பெரிக்கும்
விறகுகள்
இனி
மாடுகள் தட்டப்பயிர்களை தின்றுவிட்டது
சோளப்பயிரை மேய்ந்துவிட்டது என்ற
காரணத்திற்காக காட்டுக்காரரிடம்
திட்டுவாங்கவோ
அல்லது
தாங்கள் எள்ளுப்பயிரை தின்றதுக்காக
அப்பாவிடம் அடிவாங்கும்
வலிகளோ இல்லை
விளையாட்டுகள் மறந்த
சிறுவர்களுக்கு
தன் அழகிய அடையாளங்களை
தொலைத்துவிட்டு
நிம்மதியற்று படுத்திருக்கிறது
மனிதர்களை நிம்மதியாக
உறங்கவைத்த
பழையவீட்டு நிலைக்கதவு
மிச்சமிருக்கும்
ஒவ்வொரு வைக்கோலிலும்
தெரிகிறது
போரடித்த மாடுகளின் காலடிச்சுவடுகள்
நீரில்லா கிராமத்து நிலத்தில்
முளைத்தெழ விருப்பமில்லை
விரல்தூவிய
விதைகளுக்கும்
பிழைப்புதேடி
கிராமத்து வீட்டை குட்டிசுவர்களாக்கி
மாநகரத்தில் மாடிவீடுகட்டி குடிபெயர்ந்த
கிராமத்து மக்களைப்போல்
பயிர்களும்
தரைவழி பயணப்பட்டது போல...
மாடுகட்டும் தொழுவத்திலோ
ஆடுகட்டும் ஆட்டுகாடியிலோ
இல்லை ஏதோஓர்
புளியமரத்தின்மீதோ
சாய்ந்துகொண்டு
பால்யங்களையும்
வாலிபகாலங்களையும்
அசைபோடுகிறது
என் முப்பாட்டன் ,பாட்டன் ,அப்பன்
வியர்வைசிந்தி
தொட்டுபிடித்து
மாடுகள் கண்ணீர் சிந்தி
இழுத்து உழுத
கலப்பை
மாடுகள் விற்ற வீட்டில்
வைக்கோல்போர் அடையுமிடத்தில்
கட்டிவைத்தபடியே
காய்ந்துகொண்டுயிருக்கிறது
அடுப்பெரிக்கும்
விறகுகள்
இனி
மாடுகள் தட்டப்பயிர்களை தின்றுவிட்டது
சோளப்பயிரை மேய்ந்துவிட்டது என்ற
காரணத்திற்காக காட்டுக்காரரிடம்
திட்டுவாங்கவோ
அல்லது
தாங்கள் எள்ளுப்பயிரை தின்றதுக்காக
அப்பாவிடம் அடிவாங்கும்
வலிகளோ இல்லை
விளையாட்டுகள் மறந்த
சிறுவர்களுக்கு
தன் அழகிய அடையாளங்களை
தொலைத்துவிட்டு
நிம்மதியற்று படுத்திருக்கிறது
மனிதர்களை நிம்மதியாக
உறங்கவைத்த
பழையவீட்டு நிலைக்கதவு
மிச்சமிருக்கும்
ஒவ்வொரு வைக்கோலிலும்
தெரிகிறது
போரடித்த மாடுகளின் காலடிச்சுவடுகள்
ஆவிகள் நடமாடும் கிராமம்
சுடுகாட்டில்
சோறு சமைக்க
அடுப்பெரித்துக்கொண்டு இருந்தார்கள்
எம் மூதாதையர்கள்
பக்கத்துக்காட்டிலுள்ள
புளியமரத்தில்
ஊனாங்கொடிகளை கட்டி
தூளியாடிக்கொண்டு இருந்தார்கள்
சின்ன வயதில் நோய்வாய்ப்பட்டு
செத்துப்போன
சத்யா அக்காவும்
பெருமாள் அண்ணனும்
யாருடைய தொடுதலின்றியும்
நடுப்பாதையிலிருந்து
சாலையோரத்திற்க்கும்
சாலையோரத்திலிருந்து
நடுப்பாதைக்கும்
மாறி மாறி நடந்து வந்தார்
தவறி விழுந்து செத்துப்போன
பார்வையற்ற சுந்தராசு மாமா
வெகுநேரமாய்
டாஸ்மார்க் கடையில்
காசை நீட்டிக்கொண்டே இருந்தார்
கள்ள சாராயம் குடித்து
செத்துப்போன தாத்தா
தொட்டிலில் அழுகின்ற குழந்தைக்கு
பாலூட்ட தவியாய் தவிக்கிறாள்
பிரசவித்த நாளிலே
காக்காய் வலிப்புவந்து இறந்த
மகேஸ்வரி
இருக்கும்போது சோறுபோடாத
மகன்கள் வெளியூரில் இருக்க
குழிமேட்டில்
வெற்றிலை பாக்கு புகையிலையோடு
மதுபானத்தையும்
தன் பேரன் வைக்க
ஆசை ஆசையாய்
குடித்துக்கொண்டு இருக்கிறார்
வேலப்பன்
.
புளியமரத்தடியில்
பெட்டிக்கடைவைத்து
தேன்மிட்டாய் ,முறுக்கு ,அப்பளம்
விற்றுக்கொண்டு இருந்தார்
அம்மைவந்து அனாதியாய்
அகால மரணமடைந்த
முட்டிக்காலில் நடக்கும் அமுலம்மா
மண்டபத்தைச்சுற்றி
ஒட்டுப்பீடிகளை தேடிக்கொண்டு இருந்தார்
பேயடித்த சவரியார் மாமா
பச்சை குளத்தில்
நீச்சல் பழகிக்கொண்டு இருந்தார்கள்
கரையோரத்தில் குளிக்கும்போது தவறி
ஆழத்தில் மூழ்கிய
மேட்டுப்பட்டி சத்தியா
வத்தலம்பட்டி ரேணுகா உட்பட நாலுபெண்களும்
அவரவர் அவரவர்
வேலைகளை செய்துகொண்டு இருக்கையில்
ஆடையின்றி அண்ணா கயிறு இன்றியும்
போர்வை போர்த்திக்கொள்ளாமல்
வியர்வை சொட்டச்சொட்ட
யாருமில்லா குழிக்குள்
படுத்துக்கொண்டு இருந்தது
ஆறடி வெளிச்சம்
கிராமம் கிராமமாகவே இல்லை
சுடுகாடும் சுடுகாடுபோலவே இல்லை
ஆக்கிய சோறை ஆறவைத்து
அத்தனைபேரும்
ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்
கடைக்குட்டி செல்ல பிள்ளையான
எனக்கு
பாத்திரமே காலியானபோதும்
கடைசிவரை
என் வயிருமட்டும் நிரம்பவே இல்லை
இப்படி இப்படியாக
இறந்துபோன மனிதர்கள்
வசிக்கும் ஊரானது
சுடுகாடு
கொஞ்சம் கொஞ்சமாய்
யாருமற்றுப்போன
ஆவிகள் நடமாடும் சுடுகாடனது
கிராமம்
சோறு சமைக்க
அடுப்பெரித்துக்கொண்டு இருந்தார்கள்
எம் மூதாதையர்கள்
பக்கத்துக்காட்டிலுள்ள
புளியமரத்தில்
ஊனாங்கொடிகளை கட்டி
தூளியாடிக்கொண்டு இருந்தார்கள்
சின்ன வயதில் நோய்வாய்ப்பட்டு
செத்துப்போன
சத்யா அக்காவும்
பெருமாள் அண்ணனும்
யாருடைய தொடுதலின்றியும்
நடுப்பாதையிலிருந்து
சாலையோரத்திற்க்கும்
சாலையோரத்திலிருந்து
நடுப்பாதைக்கும்
மாறி மாறி நடந்து வந்தார்
தவறி விழுந்து செத்துப்போன
பார்வையற்ற சுந்தராசு மாமா
வெகுநேரமாய்
டாஸ்மார்க் கடையில்
காசை நீட்டிக்கொண்டே இருந்தார்
கள்ள சாராயம் குடித்து
செத்துப்போன தாத்தா
தொட்டிலில் அழுகின்ற குழந்தைக்கு
பாலூட்ட தவியாய் தவிக்கிறாள்
பிரசவித்த நாளிலே
காக்காய் வலிப்புவந்து இறந்த
மகேஸ்வரி
இருக்கும்போது சோறுபோடாத
மகன்கள் வெளியூரில் இருக்க
குழிமேட்டில்
வெற்றிலை பாக்கு புகையிலையோடு
மதுபானத்தையும்
தன் பேரன் வைக்க
ஆசை ஆசையாய்
குடித்துக்கொண்டு இருக்கிறார்
வேலப்பன்
.
புளியமரத்தடியில்
பெட்டிக்கடைவைத்து
தேன்மிட்டாய் ,முறுக்கு ,அப்பளம்
விற்றுக்கொண்டு இருந்தார்
அம்மைவந்து அனாதியாய்
அகால மரணமடைந்த
முட்டிக்காலில் நடக்கும் அமுலம்மா
மண்டபத்தைச்சுற்றி
ஒட்டுப்பீடிகளை தேடிக்கொண்டு இருந்தார்
பேயடித்த சவரியார் மாமா
பச்சை குளத்தில்
நீச்சல் பழகிக்கொண்டு இருந்தார்கள்
கரையோரத்தில் குளிக்கும்போது தவறி
ஆழத்தில் மூழ்கிய
மேட்டுப்பட்டி சத்தியா
வத்தலம்பட்டி ரேணுகா உட்பட நாலுபெண்களும்
அவரவர் அவரவர்
வேலைகளை செய்துகொண்டு இருக்கையில்
ஆடையின்றி அண்ணா கயிறு இன்றியும்
போர்வை போர்த்திக்கொள்ளாமல்
வியர்வை சொட்டச்சொட்ட
யாருமில்லா குழிக்குள்
படுத்துக்கொண்டு இருந்தது
ஆறடி வெளிச்சம்
கிராமம் கிராமமாகவே இல்லை
சுடுகாடும் சுடுகாடுபோலவே இல்லை
ஆக்கிய சோறை ஆறவைத்து
அத்தனைபேரும்
ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்
கடைக்குட்டி செல்ல பிள்ளையான
எனக்கு
பாத்திரமே காலியானபோதும்
கடைசிவரை
என் வயிருமட்டும் நிரம்பவே இல்லை
இப்படி இப்படியாக
இறந்துபோன மனிதர்கள்
வசிக்கும் ஊரானது
சுடுகாடு
கொஞ்சம் கொஞ்சமாய்
யாருமற்றுப்போன
ஆவிகள் நடமாடும் சுடுகாடனது
கிராமம்
குடிசை குடைக்குள் ஒரு குட்டை
வானில் பறந்துகொண்டிருந்த
திட்டு திட்டான
சாம்பல் நிற மேகங்கள்
வெயிலில் வேலை செய்யும்
கருத்த விவசாயி உடல்போல்
வானம் கறுத்துப்போனது
வாசலில் காய்ந்த விறகுகள்
நனையக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் கொஞ்சமாய்
அள்ளி அள்ளி
திண்ணையில் போட்டாள் அம்மா
தான் நனைந்தபடியே
பின்பு
அடிகுழாயிக்கும் அருகிலிருந்த
ஆட்டுக்குட்டிகளை பிடித்துவந்து
மீதித்திண்ணையில்
கட்டிக்கொண்டு இருக்கையில்
ஆடுகளோடு முற்றும் நனைந்திருந்தாள்
உரல்கல்லில் கட்டிவைத்த
மாட்டையும்
முளைக்குச்சியில் கட்டிவைத்த
கன்றுக்குட்டிகளையும்
ஒழுகுகின்ற கொட்டத்தில்
ஒழுகாத இடம்பார்த்து
கட்டிவைத்தார் அப்பா
பாடப்புத்தகங்களை
பையில் நுழைத்து
ஒழுகாத இடத்தில
நனையாமல் வைக்க
முயற்சி செய்து கொண்டுயிருந்தோம்
மூன்றாம் வகுப்பு படித்த நானும்
நான்காம் வகுப்பு படித்த அக்காவும்
குடிசைகுடைக்குள்
வெவ்வேறு இடங்களில்
ஒழுகிய தண்ணீரை பிடித்துவைக்க
குடும்ப உறுபினர்கள்
அத்தனைபேரும் ஆயத்தமானோம்
சுவர்மீது வெள்ளிதாம்பூலத்தட்டும்
அடுப்பங்கரையில்
பித்தளை தாம்பூலத்தட்டும்
தையல் இயந்திரத்தின்மீது செம்பும்
அம்மிக்கல்லுக்கு அருகில்
குண்டுச்சட்டியும்
நடுவீட்டில் சாப்பாட்டுத்தட்டும்
அதன்பக்கத்தில் டம்ளரும்
இடம்பெயர்ந்துகிடக்கும்
திடீரென்று இடிமுழக்கத்துடன்
மழைப்பாம்பு தீவிரமடைந்து
பாத்திரங்களில் இருந்து
பொங்கிவழிந்து
தென்மேற்கு மூலைநோக்கி
ஓடத்துவங்கியது
நடுக்கத்தோடு நின்றுகொண்டுயிருந்த
அப்பாயி
அர்ஜுனா அர்ஜுனா சொல்லும்போது
பெரியக்காவும்
அர்ஜுனா அர்ஜுனா சொன்னது
நானும் சின்னக்காவும்
யார் அந்த அர்ஜுனா என்று
முனுமுனுத்துக்கொண்டோம்
வெகுநேரமாய் அம்மாவும் பெரியக்காவும்
மொண்டு மொண்டு
வாசலில் ஊற்றிக்கொண்டே இருந்தார்கள்
வீட்டில் தேங்கிய மழைநீரை
அன்றிரவு
விடிய விடிய உறங்கவிடாமல்
உடல் முழுவதும்
நட்டு நட்டுன்னு
கொத்திக்கொண்டே இருந்தது
மழைபாம்புகள்
திட்டு திட்டான
சாம்பல் நிற மேகங்கள்
வெயிலில் வேலை செய்யும்
கருத்த விவசாயி உடல்போல்
வானம் கறுத்துப்போனது
வாசலில் காய்ந்த விறகுகள்
நனையக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் கொஞ்சமாய்
அள்ளி அள்ளி
திண்ணையில் போட்டாள் அம்மா
தான் நனைந்தபடியே
பின்பு
அடிகுழாயிக்கும் அருகிலிருந்த
ஆட்டுக்குட்டிகளை பிடித்துவந்து
மீதித்திண்ணையில்
கட்டிக்கொண்டு இருக்கையில்
ஆடுகளோடு முற்றும் நனைந்திருந்தாள்
உரல்கல்லில் கட்டிவைத்த
மாட்டையும்
முளைக்குச்சியில் கட்டிவைத்த
கன்றுக்குட்டிகளையும்
ஒழுகுகின்ற கொட்டத்தில்
ஒழுகாத இடம்பார்த்து
கட்டிவைத்தார் அப்பா
பாடப்புத்தகங்களை
பையில் நுழைத்து
ஒழுகாத இடத்தில
நனையாமல் வைக்க
முயற்சி செய்து கொண்டுயிருந்தோம்
மூன்றாம் வகுப்பு படித்த நானும்
நான்காம் வகுப்பு படித்த அக்காவும்
குடிசைகுடைக்குள்
வெவ்வேறு இடங்களில்
ஒழுகிய தண்ணீரை பிடித்துவைக்க
குடும்ப உறுபினர்கள்
அத்தனைபேரும் ஆயத்தமானோம்
சுவர்மீது வெள்ளிதாம்பூலத்தட்டும்
அடுப்பங்கரையில்
பித்தளை தாம்பூலத்தட்டும்
தையல் இயந்திரத்தின்மீது செம்பும்
அம்மிக்கல்லுக்கு அருகில்
குண்டுச்சட்டியும்
நடுவீட்டில் சாப்பாட்டுத்தட்டும்
அதன்பக்கத்தில் டம்ளரும்
இடம்பெயர்ந்துகிடக்கும்
திடீரென்று இடிமுழக்கத்துடன்
மழைப்பாம்பு தீவிரமடைந்து
பாத்திரங்களில் இருந்து
பொங்கிவழிந்து
தென்மேற்கு மூலைநோக்கி
ஓடத்துவங்கியது
நடுக்கத்தோடு நின்றுகொண்டுயிருந்த
அப்பாயி
அர்ஜுனா அர்ஜுனா சொல்லும்போது
பெரியக்காவும்
அர்ஜுனா அர்ஜுனா சொன்னது
நானும் சின்னக்காவும்
யார் அந்த அர்ஜுனா என்று
முனுமுனுத்துக்கொண்டோம்
வெகுநேரமாய் அம்மாவும் பெரியக்காவும்
மொண்டு மொண்டு
வாசலில் ஊற்றிக்கொண்டே இருந்தார்கள்
வீட்டில் தேங்கிய மழைநீரை
அன்றிரவு
விடிய விடிய உறங்கவிடாமல்
உடல் முழுவதும்
நட்டு நட்டுன்னு
கொத்திக்கொண்டே இருந்தது
மழைபாம்புகள்
Subscribe to:
Comments (Atom)